11/03/2010

வேற்று கிரகவாசிகள் அட்டாக் ...!!!???

       அறிவியல் அறிஞர் திரு. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று விளக்கிய உரையின் சாராம்சம் தினமலரில் வெளியாகியிருந்தது. அது உங்கள் பார்வைக்கு...

நன்றி தினமலர்


        வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.

        பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓர் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது. பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது. ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள்.


          இதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 

        1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது.


வேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது "வாவ்' என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த "வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம்.


 ஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் இதை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  


        அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... 



10/29/2010

டைம் ட்ராவலர் சார்லி சாப்ளின் படத்திலா..? சர்ச்சை ..!!!

டைம் ட்ராவலர் சார்லி சாப்ளின் படத்திலா..? சர்ச்சை ..!! 
          
            பொதுவா   எல்லோருக்குமே  தான் முன்னால  செய்ஞ்சிருந்த தப்பைத் திருத்திக்க ஒரு வாய்ப்பு இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் இருப்பதுண்டு. இந்த தீராத எண்ணத்தின் வாயிலாக மனித மூளையில் உதித்ததுதான் டைம் மெஷின். இதப்பத்தி நெறைய ஆய்வுகள் , கட்டுரைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன . (ஆனா நான் ஒன்னும் படிச்சதில்லைங்கறது வேற விஷயம்) 
          
         இப்படி ஒரு சுவாரஸ்யமான மேட்டர் கெடச்சா ஹாலிவுட் காரங்க சும்மா விடுவாங்களா..? இத கருவா வச்சு நெறைய படங்கள் எடுத்து வுட்ருக்காங்க.. அவங்க படத்தில் டைம் மெஷின் எந்த உருவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
           
          உதாரணத்துக்கு, ஒரே  இடத்தில் நிலையாய் வைத்திருக்கக்கூடிய, 3 அடிக்கு 3 அடி  ரூம் போல உள்ள மெஷின், எ.கா; நம்ம தல டென்ஷல் வாஷிங்டன் நடிச்ச "deja vu"..  மனுஷன் லுக்கும், பேசுற தொனியும் கலாசலா இருக்கும்.. [இதில் ஒரு உட்டாலக்கடி மேட்டர் காட்டியிருப்பாங்க..  அவர்  தலையில் ஒரு சமாசாரம் மாட்டிக் கிட்டு, அதில்  உள்ள லென்சில், அட் ட டைம்ல (உபயம் விவேக் ) நிகழ் அண்ட் கடந்த காலம் பாத்துக்கிட்டே கார் ஓட்டுவாரு..] 
          
            அல்லது harry potter 3 prisoner of askaban இல் வரும் ஒரு சின்ன டாலராக கூட இருக்கலாம்.  லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஒரு காராக கூட இருக்கலாம் (எ.கா; Back to the future series இப்படத்தின் தீவிர ரசிகன் நான்.) டைம் ட்ராவல் க்கு கார் என்பது ஓரளவு லாஜிக்காகவும் இருக்கும்.. ஹி ..ஹி...
         
            அடடா.. எங்க ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டனே... சரி மேட்டருக்கு வருவோம்.. சமீபத்துல ஒரு ஸ்பெஷல் ஷோ ல, சார்லி சாப்ளினோட படங்களின் behind the scenes காட்டியிருக்காங்க.. அதுல The Circus படத்தோட சீன்களை மட்டும் நல்லா குறு குறு ன்னு பாத்த ஒருத்தர் அதிர்ச்சி + ஆச்சர்யப் பட்டிருக்கிறார்...அவர் வெளியிட்ட யு ட்யுப் வீடியோவை முதல்ல பாருங்களேன்..





           இதுல  நாம பாத்தது ஒரு டைம் ட்ராவலர் + அவரோட செல் போன் னு சொல்றாங்க.. அதெப்படி 1928 ல செல் போன்..? அதுக்கு டவர் எப்படி கெடைக்கும் ..? என்று வீ (ண்)வாதத்துக்கு வருபவர்களுக்கு ஒரு பதில் இருக்கு.. டைம் மெஷின கண்டு பிடிச்சவைங்களுக்கு , டவர் தேவையில்லா செல் போனை கண்டுபிடிக்க தெரிஞ்சிருக்காதா என்ன...  
      
           எனக்கும் அதுல ஏதோ உண்மை இருக்கும்னு தான் தோணுது..   அட அது செல் போன் இல்லன்னு வச்சிக்கிட்டா கூட, ஒருவேளை வாக்கி டாக்கி யா இருக்க வாய்ப்பிருக்குது... சுத்து வட்டாரத்துல இருக்குற அவரோட டைம் ட்ராவலர் நண்பர்கிட்ட பேசிட்டிருக்கலாம்... எது எப்படியோங்க.. இது மட்டும் உண்மைதான் னு கன்பார்ம் ஆயிடுச்சுன்னா, நம்ம என்னென்ன மாத்தலாம் னு ஒரு லிஸ்ட் போட்டுட்டேன்..


  • ஒன்பதாப்புல பிட் அடிச்சு மாட்டிக்கிட்டது....
  • +2 ல அந்த பொண்ணு I love u சொன்னபோது பெரிய இவனாட்டம் அட்வைஸ் பண்ணி திருப்பி அனுப்புனது....
  • வழக்கமான  இடத்துலேயே ஒளிச்சு வச்ச ரேங்க் கார்டு அப்பா கண்ல பட்டு, அடிவாங்கினது...  

        இன்னும் பல பல ஐடியாஸ் மைண்ட்ல வச்சிருக்கேன்...
         நீங்களும் உங்க ஐடியாஸ்களை பின்னூட்டுங்களேன்...



10/19/2010

இளைய தளபதி விஜய் ஜோக்ஸ் (18 +)

       
 சில பல விஷயங்களெல்லாம் எப்படி எப்படி இருக்குதோ அதை அப்படி அப்படியே கொடுத்தா தான் ருசிக்கும். அதனால்தான் கீழே இப்படி இப்படி இங்க்லீஷ் லயே இருக்கு.     


 Ilaiya thalapathi Vijay never sells a movie. He gifts it to the nation.


 Ilaiya thalapathi Vijay once kicked a horse in the chin. Its descendants are today called giraffes.
 Ilaiya thalapathi Vijay will attain separate statehood in 2013.
 Ilaiya thalapathi Vijay never wet his bed as a child. The bed wet itself in fear.
Ilaiya thalapathi Vijay has already been to Mars. Thats why there are no signs of life there.
Ilaiya thalapathi Vijay doesnt breathe. Air hides in his lungs for protection.
Ilaiya thalapathi Vijay puts the laughter in manslaughter.
Ilaiya thalapathi Vijay can speak Braille.
Ilaiya thalapathi Vijay got small pox when he was a child. As a result, small pox is now eradicated.
Ilaiya thalapathi Vijay goes to court and sentences the judge.

      இதை ஏன் 18 + னு போட்டோம்னா, படிக்கிற குழந்தப்பசங்க எல்லாம் பயந்துருவாங்கலாம்.. அதான் ...

10/13/2010

காமினியிலும் எந்திரன் (சவால் சிறுகதை)






காமினியிலும் எந்திரன் (சவால் சிறுகதை)


       மருந்து நெடியும் டெட்டால் வாசனையும் மூக்கின் வழியாக மூளைக்கு அது மருத்துவமனைதான் என்று குறுஞ்செய்தி அனுப்பின . மஞ்சள்பூ போட்ட பச்சைப்பாவாடையில் இருந்த சிறுகுழந்தை அம்மாவிடம் ஊசி வேண்டாம் என்று சோகமாய் சினுங்கிக்கொண்டிருந்தது .

         நாலாப்பு கமலா டீச்சர் எப்போதும் டெட்டால் போட்டுத்தான் கை கழுவுவார்.  என்னையும் அதிலேயே கழுவச்சொல்வார்.  இப்படித்தான் டெட்டால் வாசனை எனக்கு பிடித்துப்போனது.  வெயிட் எ செகண்ட்! நான் ஏன் இங்கு வந்தேன்? ஆங்! காமினியை பார்க்கத்தானே! தேடுதலின் 17 வது நிமிடத்தில் அந்த அறையை கண்டுபிடித்தேன். டாக்டர் ஏதோவொரு  ட்யுபை அவளின் கையில் சொருகிக்கொண்டிருந்தார். அவள் காமினியேதான். டாக்டர் கதவின் பக்கம் திரும்பினார். பட்டென்று ஒளிந்து கொண்டேன். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு வயர்களைஎல்லாம் பிடுங்கி விட்டு அருகில் இருந்த ஜன்னலைத்திறந்து வெளியே குதித்தாள்.நானும் அந்த ஜன்னல் வழியே குதித்து அவளைத் தொடர்ந்தோடினேன் "காமினி.. நில்... சிவா உன்னை கொல்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறான்" என்று கத்தியபடியே.
  பலத்த காற்றின் ஆடும் மரங்களுக்கிடையே ஓடிய  காமினிக்கு எதுவும் கேட்கவில்லை.  ஆனால் தூரத்தில் ஒருவன் துரத்தி வருவதை மட்டும் கண்டாள் ;ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.  சிறிது தூரம் ஓடிய பின் நின்று திரும்பிப்பார்த்தாள்.  யாரும் தொடரவில்லை என்று தெரிந்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.  " யாரிவன்? ஒருவேளை சிவா அனுப்பிய ஆளாக இருப்பானோ ? " என்று காமினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே பின்னால் சிவா குரல் கேட்டது . 
        " இப்படி தனியா வந்து  மாட்டிக்கிட்டியே " என்று எள்ளினான் இன்ஸ்பெக்டர் சிவா.  அந்த வைரம் எத்தனை கோடி பெறும் தெரியுமா ? இந்த நாத்தம் பிடுச்ச காக்கிச்சட்டைய தூக்கிபோட்டுட்டு  மலேசியா பறந்திருவேன் " என்றான் . " என் உயிரே போனாலும் உன்னைப்போல அயோக்கியனுக்கு வைரம் எங்க இருக்குன்னு  சொல்ல மாட்டேன்டா" கர்ஜித்தாள் காமினி.  "ஸாரி...  எனக்கு வேற வழி தெரியல "  என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

           தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். காமினி  எங்கே போனாள் என்றே தெரியவில்லை . அப்பாவை ரிஷப்சனில் விட்டது நினைவுக்கு  வந்தது . அத்திருப்பத்தின் முடிவில் காமினி  தூரத்தில் தெரிந்தாள்.  பக்கத்தில் ஒருவன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான் . திடிரென்று துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றியில் வைத்தான் . யோசிக்கக்கூட அவகாசமின்றி ஓடி வந்த வேகத்தில் அவன் மீது பாய்ந்தேன். நிலைகுலைந்த அவன் அங்கிருந்த மரத்தில் மோதி மயக்கமானான் . "இவன் சிவா தானே .." என்றேன் காமினியிடம் . "உனக்கு எப்படி தெரியும்.. யார் நீ... " என்றாள் காமினி. ஏழே நிமிடத்தில் அனைத்தையும் சொல்லி முடித்தேன் .என்னை குழப்பமாய் பார்த்தாள். "நான் உங்களைக் காப்பாற்றிவிட்டேன் .."என்று சந்தோஷக் கூச்சலிட்டேன் . அப்போது வழக்கமாய் வரும் பின்னந்தலைவலி ஆரம்பித்தது.  கண்கள் இருட்டியது. தூரத்தில் ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது. நான் மயங்கிக் கொண்டிரு..............
                 
         காமினி காலிங் பெல்லை அழுத்தினாள். குழப்பம் கொட்டிக் கிடந்தது அவள் முகத்தில். கதவைத் திறந்த பரந்தாமன் " காமினி.. வெல்டன்.. எப்படியோ போலிஸ் கண்ல மண்ணை  தூவிட்டு இந்த வைரத்தைக் கொண்டு வந்துட்டியே " என்றார் ."அது இருக்கட்டும் சார்.. பட் எவனோ ஒருத்தன் சிவா கிட்ட இருந்து என்னை காப்பாத்துனான்... நீ வச்சிருக்கிற வைரம் நல்ல காரியத்துக்குத்தான் னும், நீ கெட்டவ இல்லன்னும் சொன்னான்.... உங்க பேரைக் கூட  சொல்லி நலம் விசாரிச்சான்..யாரவன்.. அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது னு தெரியலை... காலடிச்சத்தம் கேட்டு ஓடி வந்துட்டேன் .. மேலும் அவன் இன்டர்நெட், பரிசல்காரன், சவால் கதை என்றெல்லாம் உளறினான் ..." என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். ""நல்லவங்களை கடவுள் என்னிக்குமே கைவிடமாட்டார்மா...  ஆண்டவனா பாத்து அனுப்பி வச்ச அவனும் அவன் குடும்பமும் நல்லா இருக்கணும்..."" என்றார் பரந்தாமன்.
         கண்கள் வி.......ழி......த்....த.. போது நான் மருத்துவமனையில் இருந்தேன் . வெளியே அப்பா டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.   "  "  ரெண்டு வருஷத்துக்கு முன்னால, சரியா சொல்லனும்னா, 2010 செப்டம்பர் பாதியிலிருந்து அவன்ட்ட வித்தியாசத்த பாத்தோம்...நவம்பர் 15 க்கு மேலதான் சுத்தமா மாறிட்டான்... காமினி, பரிசல்காரன், இன்டர்நெட் ப்ளாக், வைரம் னு மாறி மாறி உளறிட்டே இருந்தான்... இதுவரைக்கும்  எந்த வன்முறையிலும் இறங்காதவன், இன்னிக்கி அந்த இன்ஸ்பெக்டர போட்டு அடிச்சிருக்கான்னா, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு டாக்டர் ... நீங்கதான் எப்படியாவது எம்பையனை குணப்படுத்தணும்..."""  "  

           ""  "  பயப்படாதீங்க சார் ... நீங்க சொன்னதை வச்சு இன்டெர்நெட்ல தேடிப்பாத்தேன்... பரிசல்காரன் னு ஒருத்தர் அவரோட ப்லாக்ல  வச்சிருந்த ஒரு சிறுகதை போட்டிதான்  உங்க பையன் இப்படி ஆனதுக்கு காரணம்னு நினைக்கிறேன்...அப்போட்டில over-obsessed ஆகி , போட்டில தோத்து போனதுல மூளை குழம்பிருக்கலாம்... But strangely,இன்னிக்கி காமினி னு ஒரு பொண்ணு  அட்மிட் ஆகியிருந்தாங்க.. அவங்களை இப்ப காணோம்... அந்த இன்ஸ்பெக்டர் பேரு கூட சிவா தான் .... இதெல்லாம் வச்சு பாக்கும்போது அந்த பரிசல்காரனுக்கு E.S.P. பவர் இருக்குன்னு நினைக்கிறேன்.. அவரைப் பிடிச்சு விசாரிச்சா இன்னும் நிறைய விஷயம் நமக்கும் இந்த உலகத்துக்கும் தெரியவரும்....""    என்றார் டாக்டர் . கேட்டுக்கொண்டிருந்த எனக்கு பின்னந்தலையில் சுர்க் என்றது.  மூளையை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது.  சுவற்றில் இருந்த காலண்டரை  பார்த்தேன்.  12.12.2012.  மேலே முருகன் சிரித்தார்.
          ரிசப்ஷன் டிவியில் அழகி ஒருவள் இன்று பிறந்தநாள் காணும் நடிகரும் கோ.கு.மா.கா.  கட்சித் தலைவரும் ஆன ரஜினிகாந்தை வாழ்த்திக் கொண்டிருந்தாள். கீழே ""இன்னும் இரு வாரங்களில் உலகம் அழியுமா..? அழியாதா..? அறிய சன் நியுஸ் காணத் தவறாதீர்..."" என்று கீழே ஓடிக் கொண்டிருந்தது.


                                            ---முற்றும்---

டிஸ்கி : நான் ஏற்கனவே எழுதியதுதான்.. சிறு திருத்தங்களுடன் ... ஒரு பாசிடிவ் முடிவுடன்... டைட்டில்ல ஏன்டா எந்திரன் னு கேக்குறீங்களா ... சும்மா ஒரு ஹைப்புக்குத்தான்....
                  விமர்சனங்களுக்கு  நன்றி 







10/01/2010

காமினி (சவால் சிறுகதை)





           காமினி நான் எழுதும்  முதல் கதை, சொல்லப்போனா நான் எழுதுவதே இதுதான் முதல் தடவை. என்னை எழுத தூண்டிய பெரும்பாலான பதிவர்களின் எழுத்தில் மிக முக்கியமானது ஜாக்கி சேகரின் எழுத்தும் எண்ணங்களும் ஆகும் . நன்றி.  அதே நேரத்தில் பரிசல்காரனுக்கும் என் நன்றிகள். அவர் மட்டும் போட்டி அறிவிக்காவிட்டால், எப்படி எதில் ஆரம்பிப்பது என்று தெரியாமல் தேங்கியிருந்த எனக்கு ஒரு வழி தெரிந்திருக்காது. முன்னுரை போதும் என்று நினைக்கிறேன். இனி என் முதல் முயற்சி .....

9/25/2010

சிங்கம் ஒன்று புறப்பட்டதே ....

வணக்கம் நண்பர்களே,
    ""உலகம் ரொம்ப கெட்டுப் போச்சுன்னே
      ஸ்பானர் புடிச்சவன்லாம் மெக்கானிக் னுன்றான் ""
என்ற பொருள் பொதிந்த அரிய பழமொழியை உதிர்த்த செந்தில் இன்று ""கம்ப்யுட்டர் வச்சிருக்ரவன்லாம் பிளாக்கர் ங்கறான்"" என்று சொன்னாலும் சொல்வார்.
     ஏன்னா இன்றுமுதல் நானும் வலைப்பதிவு ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன் .எனக்கு தமிழ் மீதும் தமிழ் பேசும் நன்மக்கள் மீதும் எந்த முன்விரோதமும் இல்லை . ஒரு சாதாரண மனிதனின் சின்ன ஆசைதான் .  இந்த ஆசைக்கு வித்திட்டது பெரும்பாலான பதிவர்களின் எழுத்தே ஆனாலும் முக்கியமானவர்கள் ரெண்டு பேர்.  அவர்களைப் பற்றி என் அடுத்த பதிவில்
                               நன்றி
  கீழே இதென்னடா போட்டோ னு கேக்குறீங்களா...
சும்மா ஒரு விளம்பரம்தான் ... ஹி.. ஹி ...